கழுத்தில் தங்கமா? தங்கத்தில் கழுத்தா? தங்கத்தை மாலையாக அணிந்த பெண்!!

577

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இதனால் இன்று நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை நகைக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கழுத்து நிறைய அணிந்திருந்த நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்கத்தை அவர் மாலைபோல் கோர்த்து மாட்டியிருந்தார், அந்தத் தங்கம் போதாது என்று அவர் மீண்டும் தங்க வாங்க வந்தது ஆச்சரியத்தை கிளப்பியது.

அட்சய திருதியை நாளில் நகைகள் வாங்கினால் செல்வம் சேரும் என்பதால் இந்தநாளில் நகை வாங்க வந்ததாக கூறியுள்ளார்.