பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : நெருக்கடியில் இலங்கை!!

600

நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய நாட்டவர்களை துன்புறுத்தியதாக கூறுப்படும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபையின் இயக்குனர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டல் தொடர்பில் இலங்கை சுற்றுலா அதிகார சபை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் நிறைவடையும் வரை ஹோட்டலை மூடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாகவும், அந்த உத்தரவினை குறித்த ஹோட்டலின் உரிமையாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இயங்கும் இந்த ஹோட்டல் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் நடத்தி சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டலில் இரு பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் இடம்பெற்றதுடன், நெதர்லாந்தை சேர்ந்த இளைஞன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், சர்வதேச ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.