கர்ப்பிணி காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த காதலன்!!

553

அமெரிக்காவில் கர்ப்பிணி காதலியை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த காதலன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். குயிண்டின் நீல் (27) என்ற இளைஞரும் ஷனோன் மணி (21) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், ஷனோன் மணி கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஷனோன் மணி அங்குள்ள ஒரு சேமிப்பு கிடக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சூட்கேசின் உள்ளே அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் மணியின் காதலன் நீலை பிடித்து விசாரித்தார்கள்.

ஆரம்பத்தில் மணியை சம்பவம் நடந்த அன்று தான் பார்க்கவில்லை என கூறிய நீல், பின்னர் பொலிசாரின் கிடுக்குபிடி விசாரணையின் அவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

நீல் அளித்துள்ள வாக்குமூலத்தில், மணியின் வீட்டுக்கு நான் சென்ற போது எங்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கி என்னை மணி சுட பார்த்தார், ஆனால் சுதாரித்து கொண்ட நான் மணியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரை இரண்டு முறை சுட்டேன்.

இதையடுத்து கீழே விழுந்த மணி மீண்டும் அங்கிருந்த கத்தியை எடுத்து என்னை குத்த வந்தார், ஆனால் நான் கத்தியை அவரிமிருந்து பிடுங்கி அவரை வெட்டியதில் இறந்துவிட்டார்.

பின்னர் மணியின் சடலத்தை சூட்கேசில் வைத்து காரில் எடுத்து போய் சேமிப்பு கிடங்கில் போட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து நீலை பொலிசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.