இலங்கை வந்த பாரிய விமானம் : ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

320

 

உலகின் மிகப் பெரிய விமானமான என்டநோவ் 225 என்ற சரக்கு விமானம் நேற்று இலங்கையில் தரையிறங்கியது. விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டது.

என்டநோவ் 225 என விமானத்தினால் ஒரே நாளில் 13 மில்லியனுக்கும் அதிக இலாபம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதறக்காக ஊழியர் சபையினர் வசதி ஏற்படுத்தி கொடுத்தமையினால் இந்த பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்டநோவ்-225 என்ற விமானம் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக கருதப்படுகின்றது. குறித்த விமானம் பாகிஸ்தான் கராச்சி நகரத்தை நோக்கி சென்ற சந்தர்ப்பத்தில் நேற்று திடீரென மத்தல விமானத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.