படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

330

கினிகத்தேன – யடிபேரிய பிரதேசத்தில், களனி கங்கையில் படகு ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 23 வயதுடைய, கடுவெல்லேகம – மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான் எனும் மொரட்டுவ பல்கலைகழக பொறியியல் பீட மாணவன் என தெரியவந்துள்ளது.

பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, படகில் சவாரி செய்த இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.