யாழில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்!!

298

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுள்ளது. இதன்போது, குருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பத்மராஜன் எனும் இளைஞர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் கடும் வெப்பம் நிலவிவருகின்றது . இந்த நிலையிலேயே யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.