திடீரென வீதிக்கு வந்த கடல் நீர் : பதற்றமடைந்த மக்கள்: கடல் அலை மேலும் உயரும் ஆபத்து!!

802

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை பல பகுதிகளில் கடல் அலை உயரும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை கடல் அலை உயரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடல் அலை அதிகரிப்பு காரணமாக ஹிக்கடுவ பிரதேசத்திலும், ஹபராதுவ மற்றும் உணவட்டுண பிரதேசத்திலும் நீர் பெருகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி பிராந்திய உதவிப் பணிப்பாளர் லெப்ரினன் கேணல் சம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு 7.30 அளவில் திடீரென கடல் நீர் ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான பாதைக்கு வந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பதற்ற மடைந்ததுடன், குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.