வவுனியா முகாம் இராணுவத்தினர் 14 பேர் வைத்தியசாலையில் திடீர் அனுமதி!!

761

 

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து இன்று நண்பகல் 12.30மணியளவில் 14இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முதல் பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு14 இராணுவத்தினர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல இராணுவத்தினருக்கு பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவத்தினரில் பெருமளவானோர் உள்ளாடைகளுடனும் முகத்தில் ஒரு வித சாயம் பூசிய நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-