வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு!!

446

 

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியால் சமுர்த்தி பயனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வொன்று மிகவும் சிறப்பாக இன்று (22.04) நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறப்பு விருந்தினராக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் திருமதி எஸ்.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வங்கியின் முகாமையாளர் இ.இரட்ணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் என பல நடைபெற்றதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன.