கண், நாக்கை பிடுங்கி கொலை : 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்!!

1112

 

இந்தியாவில் 7 வயது சிறுவனை கடத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது, சிறுவன் கத்தியதால் அவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தம்பதி பூஜா தேவி(25)-ராகேஸ் குமார்(27). இவருக்கு Purshotam Kumar என்ற 7 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 2-ஆம் திகதி வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது Sandeep Singh(21) என்ற நபர் சிறுவனை கடத்திச் சென்றுள்ளான்.

அப்போது பூஜா தேவி வீட்டிற்கு உள்ளே சமையல் செய்து கொண்டிருந்த போது, அம்மா என்று கத்தியுள்ளான். இதனால் அவர் என்ன என்று கேட்ட போது பதில் வராத காரணத்தினால், அவர் உடனடியாக வெளியில் வந்து பார்த்துள்ளார்.

ஆனால் மகன் காணாமல் போனதால், உடனடியாக தனது கணவருக்கு இதைப் பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இது குறித்து இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் கடந்த 5ஆம் திகதி அவர்கள் இருந்த வீட்டிலிருந்து சுமார் 2 நிமிடம் நடந்து சென்றால் இருக்கும் தொலைவில் உள்ள குப்பைப் பகுதியில் சிறுவனின் உடல் இருந்துள்ளது.

மகன் பற்றிய தகவலை மட்டுமே பொலிசார் தெரிவித்ததால், மகன் உயிரோடு தான் இருக்கிறான் என்று பூஜா, குறித்த பகுதிக்கு விரைந்து வந்துள்ளார்.

அப்போது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் முகத்தில் மோசமான காயங்கள் மற்றும் கண், நாக்கு போன்றவைகள் பிடிங்கிய நிலையில் இருந்துள்ளது.

அதன் பின் பொலிசார் உடனடியாக உடற்கூறு ஆய்வுக்கு சிறுவனின் உடலை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது கடத்திச் சென்ற நபர் சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளான்.

இதனால் சிறுவன் கூச்சலிட்டதால் அவனை கொடூரமாக கொலை செய்துவிட்டு குப்பையில் வீசிச் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து குற்றவாளியை பொலிசார் கைது செய்த போது அவன் ஒரு மது போதைக்கு அடிமையானவன் என்றும் குழந்தைகளை கடத்தி துஷ்பிரயோகம் செய்யக் கூடியவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுவனின் தாய், என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

என் மகன் மட்டுமல்ல இந்தியாவில் சமீபகாலமாக குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

இது போன்ற கொடூரர்கள் தண்டிக்க பட வேண்டும், என் மகன் தூக்கி வீசப்பட்ட குப்பைத் தொட்டியை பார்த்தால் என் மனம் துடிக்கிறது, ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற கோபம் தான் வருகிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் குஜராத் மாநிலம் சூரத்தில் உடலில் 87 காயங்களுடன், சாக்குமூட்டையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.