பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் அடைத்து வைத்த பிரபல சர்ச்சை நடிகையின் மகன்!!

583

பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி இவர் மீது பல்வேறு சர்ச்சை வழக்குகளும் உள்ளது. இந்நிலையில் பேஸ்புக்கில் பழகிய பெண்ணை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்ததாக புவனேஸ்வரின் மகன் மிதுன் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயா (32) எனும் பெண் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். விவாகரத்து ஆன இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இவருடன் பேஸ்புக் மூலம் மிதுன் சீனிவாசன் பழகிவந்துள்ளார்.

ஒரு நாள் உதயாவிடம் பேசிய மிதுன் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். உதயாவும் முதலில் இதற்கு சம்மதம் என கூறியுள்ளார்.

ஆனால் மிதுன் போதைப்பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்ததால் திருமணம் செய்யும் முடிவை உதயா மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மிதுன் அவரை மிரட்டியுள்ளார்.

இது குறித்து அவர்களுக்குள் மோதல் இருந்துள்ளது. இந்நிலையில் உதயாவை தன் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் மிதுன். அதன்படி உதயாவும் அவரது மகனும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உதயா மற்றும் அவருடைய மகனை வீட்டில் ஒரு அறையில் மிதுன் அடைத்து வைத்துள்ளார்.

ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை புவனேஷ்வரி இதுவும் ஒரு சர்ச்சையாக ஆகி விடக்கூடாது என்பதால் மிதுன் வெளியில் சென்ற நேரம் பார்த்து உதயாவும் அவரது மகனும் இருந்த அறைக்கதவை திறந்து விட்டு அவர்கள் தப்பிக்க உதவியுள்ளார்.

இதன் பின்னர் மிதுன் சீனிவாசன் மீது உதயா காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் அவரை கைது செய்து பொலிஸ் சிறையில் அடைத்தது.