கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை!!

284

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 2.35 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு தங்கம் கடத்தி செல்ல முற்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9.1 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, அண்மை காலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது