கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு பேர் படுகொலை!!

596

கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய, ராகம, மஹியங்கனை, குருணாகல், நிட்டம்புவ போன்ற பகுதிகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

தெல்தெனிய குபுக்கந்துர பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மொஹமட் அக்ரம் என்ற 35 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார்.

ராகம, மஹர நுகேகொடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் துவான் உஸ்மான் ரஹீம் என்ற 55 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார். மஹியங்கனை மாபாகடவெவ பகுதியில் தாய் ஒருவரும் அவரது மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

குருணாகல் யன்தம்பலாவ பகுதியில் ஜயலால் புஞ்சிஹோவ என்ற 56 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்ன தேவப்பிரிய என்ற 37 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார்.