வவுனியாவில் அரச பேரூந்தினை எரிக்க முற்பட்ட நபரினால் பரபரப்பு!!

533

 

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே நேற்று (23.04.2018) மதியம் 2 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை எரிக்க முயன்ற நபரினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இ.போ.ச ஊழியர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இ.போ.ச பேரூந்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதன் போது அவ்விடத்தில் நின்ற நபரோருவர் அருகேயுள்ள மோட்டார் வாகனம் திருத்துமிடத்தில் ஒரு போத்தலினை பெற்று எரிபொருளினை கொள்வனவு செய்து பேரூந்தினை எரிக்க முற்பட்டார்.

சம்பவ இடத்தில் நின்ற போக்குவரத்து பொலிஸாரினால் இவ் சம்பவம் தடுக்கப்பட்டதாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.