கன்னத்தில் அறைந்த விவகாரம் : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!!

933

2015 ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் ரசிகர்கள் தன்னை கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து கமல்ஹாசனை தனது படங்களில் சிவா கிண்டலடித்து வந்ததால், கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயனை கமல்ஹாசனின் ரசிகர்கள் விமான நிலையத்தில் வைத்து தாக்கினர்.

அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்தச் சம்பவம் சம்பந்தமாக நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அப்போது ரசிகர்கள் நடந்திய தாக்குதலுக்காக கமல் சார் என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்”என்று அவர் கூறியுள்ளார்,