இன்று தொடக்கம் மீண்டும் மழை ஆரம்பம் : வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை!!

388

இன்று புதன்கிழமை தொடக்கம் நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தினந்தோறும் கடுமையாக பெய்து வந்த மழை தற்போதைக்கு ஓரிரு நாட்களாக தணிந்துள்ளது.

இந்நிலையில் இன்று 25ம் திகதி புதன்கிழமை தொடக்கம் நாட்டின் பல பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணம், மத்திய மாகாணம், சப்பிரகமுவா, ஊவா, தென் மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு கடுமையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரம் பிற்பகலில் பெரும்பாலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் அவ்வாறான நேரங்களில் செல்லிடப் ​பேசிகளை உபயோகித்தல், திறந்த வௌிகள் ஊடாக பயணித்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.