2018ம் ஆம் ஆண்டு வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மக்கள் பிரதிநிதிகளை வரவேற்கும் நிகழ்வு நகரசபை நகரமண்டபத்தில் இன்று (25.04.2018) காலை 9.15 மணியளவில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நகரசபை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்க்கப்பட்டனர். இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த,
வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகராட்சிமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.