வவுனியா நகரசபையின் கன்னி அமர்வு நகரசபை தவிசாளர் கௌதமன் தலைமையில் ஆரம்பம்!!

898

 

வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று (25.04.2018) காலை 11.30 மணியளவில் நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இக் கன்னியமர்வில் வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் இ.கெளதமன், உபதவிசாளர் உள்ளிட்ட 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் அமர்வில் உப தவிசாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் நகரசபையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் வவுனியாவை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வது , சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு விடயங்கள் தொடர்பாக உரையாற்றினார். இச் சபை சிங்கள மொழி மூல மொழிப்பெயர்ப்பில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.