6 வயதுச் சிறுவனுக்கு 40 வயது நபர் செய்த கொடுமை!!

977

ஆறு வயதான சிறுவனை கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 40 வயதான நபரை தாம் கைது செய்துள்ளதாக புத்தளம், பள்ளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளம் -நாகவில்லு பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் திருமணமாகாத நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தினமும் சிறுவனை பாடசாலைக்கு அழைத்து சென்று அழைத்து வருபவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கடந்த 23 ஆம் திகதி மதியம் சிறுவனை பாடசாலையில் இருந்து அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவனின் பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை.

இந்த நிலையிலேயே சந்தேக நபர் சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.