கைது செய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை!!

660

வலி நிவாரணி என்ற போர்வையில் 800 போதை மாத்திரைகளுடன் கைதாகிய ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.ரிஸ்வி நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியையும், மற்றைய நபரையும் தேடி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வலி நிவாரணி என்ற போர்வையில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய போதை மாத்திரைகளை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் போது குறித்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானபிரிவில் கல்வி பயிலும் மாணவனே கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இதனுடன் தொடர்புடைய எனைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.