வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம் : 5 பேர் கொண்ட விசாரணைக்குழு!!

650

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்றபட்டமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆராய 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலை வைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்துவரும் நாட்களில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.