மன்னார், மாங்குளத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

282

kjanjaமன்னார் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகரில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார். இவர் வசமிருந்து ஒரு கிலோ 560 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மன்னார் தாழ்ப்பாடு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை மாங்குளம் பொலிஸ் பிரிவின் மல்லாவி வீதியில் 5 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் மன்னார் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் கைதான குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.