ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!

582

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வெளிநாட்டு படுகடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த வாரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் மட்டும் வெளிநாட்டுக் கடன் தொகை 47 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 157.46 ருபாவிலிருந்து 159.04 ரூபாவாக உயர்வடைந்துள்ளதனால் வெளிநாட்டுக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருவார காலத்தில் இந்தளவு தொகை கடன் அதிகரித்துள்ளது என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.