கல்வி நடவடிக்கைகளுக்காக பிரித்தானியா சென்ற இலங்கை இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று பெல்ட் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு யோக்சயர் பொலிஸாரினால் இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 17 மற்றும் 25 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கச்சென்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 25 வயதான தவிச பீரிஸ் என்பவர் கடந்த 27ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.