வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம்!!

358

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று(26.04) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாயும் மகளும் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறிதது மேலும் தெரியவருகையில்,

இன்று காலை சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தனது மகளை பிளசர் ரக மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் சென்றபோது சூசைப்பிள்ளையார்குளம் வீதிவழியாகச் சென்ற காய்கறிகளை ஏற்றிய கன்டர் ரக வாகனத்துடன் சந்தியில் மோதியுள்ளது.

இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லாரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும் மோட்டார் சைக்கிலினைச் செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் வாகனத்தையும் சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.