வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் முதல் நாள் அமர்வும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்!!

613

 

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் முதல் நாள் அமர்வும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும் நேற்று (25.04.2018) சபையில் இடம் பெற்றது. நேற்றைய தினம் மதியம் 2 மணியளவில் நெளுக்குளம் முருகன் கோவிலில் மத வழிபாட்டுடன் ஆரம்பித்த இந்நிகழ்வானது ஊர்வலமாக சபையை சென்றடைந்து நிகழ்விற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பகுதியில் சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தலைமையில் ஆரம்பமானது.

சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் அவர்களின் வரவேற்புரையுடனும் மங்கள விளக்கேற்றளுடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி,

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நெல்சன், அக்கட்சியின் சர்வதேச அமைப்பாளர்களில் ஒருவரான மலரவன், மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், எம்.பி.நடராஜா, ஐக்கிய தேசியகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான குமார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் உரை மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் முடிவடைந்ததும் சபையின் முதல் நாள் அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றது.