தங்கம் வாங்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

1131

தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தர முத்திரையுடனான தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், தரம் குறைந்த தங்க ஆபரணங்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த கோரிக்கையை தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை விடுத்துள்ளது.