மாணவர்கள் மூவரைக் கொன்று சடலங்கள் அமிலத்தில் மூழ்கடிப்பு!!

581

மெக்சிகோவில் 3 மாணவர்களைக் கடத்தி, கொலை செய்து, உடல்களை அமிலத் தொட்டியில் மூழ்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவர்களது உடல்கள் டெனாலா நகரில் உள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடத்திச் சென்றவர்கள் அவர்களை கொலை செய்து, உடல்களை அங்குள்ள அமிலத் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். எனவே, உடல்களை அடையாளம் காண முடியாததால் DNA பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் கொடூர குற்றங்களைப் புரியும் கும்பல்கள் உள்ளன. அவர்கள் இவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.