வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..
இன்று (26.04.2018) இரவு 9 மணியளவில் வவுனியா நகர் பகுதியிலிருந்து ஹொரவப்பொத்தான வீதியூடாக வெளிக்குளம் பகுதி நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின்புறமாக பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சிங்கள இளைஞனின் மோட்டார் வண்டியின் மோட்டார் சைக்கிளின் ஸ்டான்ட் சரியான முறையில் இல்லாதமையினால் வீதியில் உராய்ந்து முன்னால் பயணித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்
இதேவேளை குறித்த இளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் இளைஞனை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















