ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது மகளின் தவறான உறவை கண்டித்த தந்தையை அவரது மகளே உணவில் விஷம் வைத்துகொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பையை(53) என்பவர் தனது மனைவி இறந்துவிட்ட காரணத்தால், தனது மகள் முருகவள்ளி வீட்டில் உணவுசாப்பிட்டு வந்துள்ளார். திருமணமாகிஇரு குழந்தைகள் உள்ள நிலையில் முருகவள்ளிக்கும் அதே ஊரில் வசித்து வரும் வேறு ஒரு நபருக்கும்இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.
முருகவள்ளியின்கணவர் சண்முகவேல் வேலைக்குச் சென்றபின் முருகவள்ளியின் வீட்டுக்கு அந்த நபர் வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது கருப்பையாவுக்குத் தெரிந்ததால் மகளைக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் தனது பழக்கம் குறித்து தனது கணவரிடம், தந்தை தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் உணவில் விஷம் வைத்து கொலைசெய்துள்ளார்.
இதுகுறித்துஅவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,என்னை பற்றி எனது தந்தையிடம் தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இருந்தேன். இதனால்எனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி,கள்ளக்காதலன் வாங்கிவந்த விஷ மருந்தினை எனது தந்தை சாப்பிடும் உணவில் கலந்து அவருக்குகொடுத்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
விஷம் கொடுத்துகொலை செய்த மகள் முருகவள்ளியை பொலிசார் கைது செய்துள்ளனர், மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள்தெரிவித்துள்ளனர்.






