போதையில் கோவில் முன்பு மோசமாக படுத்துக் கிடந்த பெண்!!

613

தமிழகத்தில் குடி போதையில் மயங்கிய நிலையில் இளம் பெண் ஒருவர் கோவில் வாசல் முன்பு படுத்து கிடந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தஞ்சை மாவாட்டம் கும்பகோணம் அடுத்து தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் சிவன் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் இடைப்பட்ட புல்வெளியில் 18 வயது இளம்பெண் படுத்திருந்தார்.

அப்போது அந்த வழியே வாக்கிங் சென்றவர்கள் இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் அவரை தட்டி எழுப்ப முயற்சித்த போது எழும்பவில்லை.

அவர் படுத்திருந்த இடத்தின் அருகில் பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் கப்புகள் கிடந்ததால், அவர்கள் உடனடியாக கோவில் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவிலுக்கு வந்த உழியர்கள் பெண் மோசமாக படுத்து கிடந்ததால், அவரின் உடைகளை சரி செய்தும் கம்பால் அடித்தும் எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.

எழுந்த அவரிடம் அவர்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் கோவில் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் அந்த அழைத்து விசாரித்த போது குடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் பொலிசாரிடம்

தாராசுரம் கோயில் வளாகத்தில் தினமும் மது குடித்துவிட்டு வாலிபர்கள் கும்மாளம் அடிப்பர். சில நாட்களாக பகலிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.

இது குறித்து அவர்களிடம் கேட்டால் எங்களை தாக்க வருகின்றனர், இவ்வளவு நாட்கள் இளைஞர்கள் தான் இப்படி என்றால் இன்று காலை இளம் பெண் இப்படிபட்ட நிலையில் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருப்பதாக கூறியுள்ளனர்.