வவுனியாவில் இரண்டு மணிநேரமாக தரித்து நின்ற புகையிரதம் : மக்கள் அசௌகரியம்!!

561

 

வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று (28.04.2018) இரண்டு மணித்தியாலங்களாக தரித்து நின்ற புகையிரத்தினால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு செல்லும் நகர்சேர் கடுகதி புகையிரத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனுராதபுரத்திலிருந்து புகையிரத்தின் இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7.45 மணியளவிலே புகையிரதம் கொழும்பு நோக்கி புறப்பட்டது.

இதனால் பயணிகள் சுமார் 2 மணித்தியாலயம் புகையிரத நிலையத்தில் நின்றதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வழமையாக 11 மணியளவில் கொழும்பைச் சென்றடையும் இப் புகையிரதம் இன்று பிற்பகல் 3 மணியளவிலே கொழும்பு கோட்டை புகையிரத்தை சென்றடைந்தது.