வவுனியாவில் மின்னல் தாக்கி 39 வயது நபர் பலி!!

675

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று (27.04.2018) மின்னல் தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிக்குளம் இலுப்பைக்குளம், நேரியகுளம் பகுதியினை சேர்ந்த ஜோகராசா நிமலராஜ் (வயது 39) என்ற நபர் நேற்றையதினம் குளத்திற்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். இதன் போது மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மாலை 6 மணிக்குப் பின்னரும் குறித்த நபர் வீடு திரும்பாமையினால் அவரின் உறவினர்கள் தேடிய சமயத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திற்கு அருகே காணப்பட்டுள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் இரவு 10 மணியளவில் சடலத்தினை வவுனியா வைத்தியசாலைக்கு உறவினர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.