வவுனியா நகரம் பௌத்த மயமாகின்றதா? நகர் முழுவதும் வெசாக் கூடுகள்!!

414

 

வெசாக் பண்டிகையினை கொண்டாடுவதற்கு வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகள், வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட செயலகத்திலும் வெசாக் பண்டிகைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பொலிஸார், இரானுவத்தினரின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலத்திலிருந்து வவுனியா நகர் வரை பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் வெசாக் தோரணங்கள் வீதியின் இரு பக்கத்திலும் தொங்க விடப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வாசற்தலத்திற்கு அருகே பாரிய அளவிலான வெசாக் தோரணங்கள் செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினரின் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் தமிழர்களின் இடமான வவுனியா நகரம் பெருபான்மை மக்களின் கைகளுக்கு மாறி செல்கின்றமை மன வேதனையளிக்கும் விடயமென சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.