இலங்கை ரசிகருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா செய்த செயல்!!

381

 

இலங்கையை சேர்ந்த தனது ரசிகர் ஒருவரின் தந்தையின் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது இந்தியாவில் நடக்கும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் குறித்தே கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மும்பாய் இன்டியன்ஸ் அணிக்கே ஆதரவு வழங்கி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மஹலே ஜயவர்தன மற்றும் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆகியோர் மும்பாய் இன்டியன்ஸ் அணிக்கு பயிற்சியாளர்களாக இருப்பதே இதற்கு காரணம்.

இந்திய கிரிக்கெட் அணி குறிப்பாக இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகரான இலங்கையை சேர்ந்த மொஹமட் நிலாம், அண்மையில் மும்பாய் சென்று மும்பாய் இன்டியன்ஸ் அணிக்கு தனது ஆதரவை வழங்கியள்ளார்.

தனது தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது ரோஹித் சர்மா உதவியாக மொஹமட் நிலாம் தெரிவித்துள்ளார்.

மொஹமட் நிலாம் தொடர்பான காணொளி ஒன்று மும்பாய் இன்டியன்ஸ் அணியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.