வவுனியாவில் யுவதியை துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த சிறுவன்!!

662

கடந்த நான்கு நாட்களுக்கு முன் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் மாலை 6.30 மணியளவில் 20 வயதுடைய யுவதி ஒருவர் தனது பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது இருள் சூழ்ந்த நேரம் என்பதை மனதில் கொண்ட 17வயதுடைய சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் குறித்த யுவதியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போதே யுவதியின் அவயவங்களைப் பிடித்து துஷ்பிரயோகத்திற்கு முயன்றுள்ளார்.

சுதாகரித்து கொண்ட யுவதி சத்தம் போட்டு கூக்குரலிடவும் குறித்த சிறுவன் தப்பித்து ஓடியுள்ளான். இதன் போது யுவதியின் கூக்குரல் கேட்டு வந்த இளைஞர்கள் சிலர் சிறுவனின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து துரத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.

மடக்கிப் பிடித்த போது, அவன் ஒரு சிறுவன் என்று தெரியவந்ததுடன் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுவனை இளைஞர்கள் விடுவித்துள்ளனர்

தயவு செய்து பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதை மனதில் நிறுத்தி பிள்ளைகளுக்காக சற்று நேரம் செலவிடுங்கள்.