வவுனியாவில் வீதியில் கிடக்கும் தபால்கள் : காரணம் என்ன?

587

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு அருகே காணப்படும் தபால் பெட்டியில் உள்ள தபால்கள் கடந்த சில நாட்களாக வீதியில் சிதறி காணப்படுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த தபால் பெட்டில் 20க்கு மேற்பட்ட கடிதங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவைகள் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தபால் ஊழியர்களினால் எடுத்துச் செல்லாமையினால் அவைகள் வீதியில் சிதறி காணப்படுகின்றன.

இவ்வாறான தபால் ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் பல பாடசாலை மாணவர்கள், வேலை தேடுபவர்களின் விண்ணப்ப படிவங்கள் உரிய திகதிக்கு உரிய இடங்களுக்கு செல்வதில்லை. இதனால் கடிதங்களை அத் தபால் பெட்டியில் போட்டவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மேலும் அத் தபால் பெட்டி உக்கிய நிலையில் பூட்டுகள் எவையும் அற்று பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.