வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணப்படும் வீதிகள் புனரமைப்பதற்கு அக்கிராம மக்களாலும் கிராம வெளிச்சம் சனசமூக நிலைய நிர்வாகிகளாலும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தவிசாளர் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் இணைந்து குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட தூர வீதியை தார் இட்டு செப்பனிடுவதற்கு மாத்திரமே நிதி போதுமாக இருப்பதனால் அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்கு மக்கள் கோரிக்கை விடுத்திருப்பதனால் அனைத்து வீதிகளையும் குறித்த பணத்தை வைத்து கிரவல் இட்டு செப்பனிட்டு தருவதாக தவிசாளரால் உறுதியளிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.






