வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம்!!

1673

 

புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று (01.05.2018) காலை 9.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து நகரசபை வீதியூடாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தது.

இவ் ஊர்வலத்தின் போது கல்வியை விற்பனைப் பண்டம் ஆக்காதே, சைட்டம் வேண்டாம், மக்களின் நிலங்களிருந்து இராணுவமே வெளியேறு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறை என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் பேரணியாக சென்றனர். அதன் பின்னர் கலாச்சார மண்டபத்தில் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் பூ.சந்திரபத்மன், வீதி பராமரிப்பு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.மகேந்திரன்,

இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் ஆர்.சித்திரன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உபதலைவர் செ.மதுரகன், மூத்த தொழிச்சங்கவாதி ஹென்றி மகேந்திரன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக செ.நந்தமோகன், தேசிய கலை இலக்கிய பேரவை சார்பாக எஸ்.டொன்போஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.