வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!!

522

ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி தக்வாப் பள்ளிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் யுவதியொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்ட யுவதி தாமரைக்கேணி கிராமத்தில் வசிக்கும் 17 வயதானவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சடலம் ஏறாவூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவதி தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.