உத்திரபிரதேசத்தில் தலித் நபரை கட்டி வைத்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த 4 நபர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலித் இனத்தை சேர்ந்த சித்தாராம் என்பவர் தனக்கு சொந்தமான சிறிய நிலத்தில் கோதுமை பயிர் செய்துவந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த உயர்ந்த சாதி பிரிவினர், தங்களது நிலத்தில் உள்ள கோதுமையை முதலில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும் என சித்தராமிடம் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு சித்தாராம் மறுத்துவிட்டார். இதனைத்தொடர்ந்து நான்கு பேர் சேர்ந்து, சித்தாராமை மரத்தில் கட்டி வைத்து, அடித்து கொடுமைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனால் சித்தாராமின் மனைவி இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
Vijay Singh, Vikram Singh, Sompal Singh மற்றும் Pinku ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் தலைமறைவாகியுள்ளதால், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என பொலிசார் கூறியுள்ளனர்.






