வவுனியாவில் இரு வேறு வீதி விபத்துக்கள்!!

725

 

வவுனியா இன்று (02.05) A9 வீதியில் இரு வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ் விபத்து சம்பவங்கள் பற்றி தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் 4 மணியளவில் யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக எதுவித காயங்களும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை மாலை 5 மணியளவில் யாழ் நோக்கி தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஓமந்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது குறித்த விபத்திலும் எதுவித காயங்களும் இன்றி பயணித்தவர்கள் தப்பினர்

இவ் விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.