வவுனியாவில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவன் கைது!!

1033

வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்றையதினம் (01.05.2018) ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கா.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு செல்லவில்லை. இதையடுத்து குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் நலனை கருத்தில் கொண்டு மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டுக்கு சென்று குறித்த பாடசாலை மாணவனை தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குதலினால் கோபமுற்ற மாணவன் நேற்றையதினம் (01.05.2018) பாடசாலைக்கு சென்று ஆசிரியரை தாக்க முயன்றுள்ளார்.

உடனடியாக பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு தெரிவித்தமையடுத்து பொலிஸார் மாணவனை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.