கனடாவில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு இலங்கையில் நடந்த நிகழ்வு!!

536

கனடாவில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு இலங்கையில் உள்ள உறவினர்கள் தான நிகழ்வு ஒன்றை செய்துள்ளனர். கடந்த வாரம் கனடா, டொரொன்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணுக்காக தானம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மில்லேவ, கிதேல்பிட்டிய பிரதேசத்தில் இந்த தானம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரேனுகா அமரசிங்கவின் இறுதி அஞ்சலி நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கனடா டொரொன்டோ நகரில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரண குடாஓய பிரதேசத்தை சேர்ந்த ரேனுகா அமரசிங்க தனது 46 வயதில் உயிரிழந்துள்ளார். சுமார் 17 வருடங்கள் அவர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு கனடாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.