வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில் இம் மழை மக்களின் மனங்களையும் குளிரவைத்துள்ளது.
இந் நிலையில் நேற்று பெய்த கடும் காற்றுடன்கூடிய மழையினால் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த 80 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட கொட்டகை பாறி விழுந்துள்ளது. மேலும் சமையல் கூடத்தின் கூரை ஓடுகளும் சேதமடைந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
250 இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விபயிலும் இப் பாடசாலையின் இக் கொட்டகை உடைந்து வீழந்தமையால் மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வவுனியா வடக்கில் மேலும் சில பாடசாலைகளும் இம் மழையினால் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.










