இலங்கை உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஒன்பது நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு பரவும் ரேபிஸ் எனும் ஆபத்தான வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன், இந்த வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாக காணப்படுவதாகவும், இதன் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியில் 59 ஆயிரம் பேர் வரையில் வருடாந்தம் மரணிப்பதாவும் கூறப்படுகிறது.
உலகில் ரேபிஸ் எனும் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களில் 45 சதவீதமானவர்கள் இலங்கை உள்ளிட்ட தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாய்களிடம் இருந்தே இந்த தொற்று அதிகளவில் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.






