வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

590

 

வவுனியா பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (04.05.2018) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஆசிரியை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்..

பூந்தோட்டம் சந்தியிலிருந்து இளைஞர்கள் இருவர் பயணித்த ஹொண்டா ரக மோட்டார் சைக்கிளும் பூந்தோட்டம் சந்தி நோக்கி பயணித்த ஆசிரியையின் ப்ளஸுர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திவந்தகாகவும் இதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப் பகுதி இளைஞர்கள் சிலர் மாலை மற்றும் இரவு வேளைகளில் மதுபோதையில் வாகனங்களை வேகமாகச் ஒட்டிச் செல்வதாகவும் இதனால் விபத்துக்களை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதாகவும்,

வீதியின் முக்கியமான இடங்களில் வேகத் தடைகளை அமைக்கவேண்டும் எனவும் போக்குவரத்துப் பொலிசாரும் மாலை வேளையில் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.