தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள தமிழ் மாணவன்!!

996

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலய தமிழ் மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3ஆம் இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தரம் 7 வகுப்பு பிரிவில் கலந்து கொண்டு அவர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார். அத்துடன் பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும், பாடசாலை கற்றலை மாத்திரம் முழுமையாக பயன்படுத்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அதிகஸ்ட பாடசாலையான குறித்த பாடசாலையிலிருந்து கடந்த காலங்களிலும் சமூக விஞ்ஞான போட்டியில் கலந்து கொண்ட மாணவரொருவர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.