மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவர்கள் சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும், அமிர்தலிங்கம் அஜந்தா என்ற மாணவி தரம் 7இல் தேசிய ரீதியில் முதலிடத்தினையும், அதே வகுப்பில் ஜடேஸ்வரன் உதேசினி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியாக இப்பாடசாலை இவ்வாறான தேசிய சாதனையை இதுவரை புரியாத நிலையிலும் முதன்முறையாக சமூக விஞ்ஞானப் போட்டியில் புரிந்துள்ளமை எடுத்துக்காட்டத்தக்கதாகும்.








