பேய் சிறுவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்ட சகோதரர்களின் தற்போதைய நிலை!!

799

 

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பேய் சிறுவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்ட சகோதரர்கள் இருவரை தற்போது அந்த கிராமத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விசித்திர நோயால் தாக்குண்டு பற்கள் சிதைந்து முகம் அகோரமாக காட்சியளித்த Ashfaq(11) மற்றும் Mushtaq Khan(8) ஆகிய சகோதரர்களை பேய் சிறுவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விவகாரத்தில் தலையிட்டு, அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரமும் மேற்கொண்டது.

இதனையடுத்து குறித்த சிறுவர்களுக்கு ஏற்பட்டது விசித்திர நோய் தான் எனவும் அவர்கள் பேய் சிறுவர்கள் அல்ல எனவும் கிராமத்தினர் புரிந்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்களை இதுநாள் வரை ஒதுக்கி வைத்திருந்த கிராம நிர்வாகம் தங்கள் கிராமத்திற்குள் குடியிருக்கவும் அனுமதி அளித்துள்ளது.

தற்போது எஞ்சிய கிராம சிறார்களுடன் அவர்கள் கிராமத்தில் விளையாடுகின்றனர். இதுவரை பயந்து ஒதுங்கிய கிராம மக்கள் தற்போது சிரித்த முகத்துடன் அவர்களை எதிர்கொள்கின்றனர்.

முன்பு பாடசாலையிலும் கிராமத்திலும் கடுமையாக கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான சகோதரர்கள் தற்போது எஞ்சிய சிறார்களுடம் கல்வி கற்றுக் கொள்ளவும் துவங்கியுள்ளனர்.